சூழால் - பீலிக்குளம் சாலை சீரமைப்புப் பணி தொடக்கம்
கொல்லங்கோடு அருகே அடைக்காக்குழி ஊராட்சி பகுதியில் உள்ள சூழால் - பீலிக்குளம் சாலை ரூ. 32.70 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:08 AM
கொல்லங்கோடு அருகே அடைக்காக்குழி ஊராட்சி பகுதியில் உள்ள சூழால் - பீலிக்குளம் சாலை ரூ. 32.70 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டது.
எப்.எஸ்.சி. திட்டத்தின் கீழ் 32.70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் இந்த சாலை சீரமைக்கும் பணியை, கிள்ளியூா் எம்எல்ஏ ராஜேஷ்குமாா் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், அடைக்காக்குழி ஊராட்சித் தலைவா் ஜெயராணி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராகவன், கட்சியின் மாநிலச் செயலா் பால்ராஜ், முன்சிறை மேற்கு வட்டாரத் தலைவா் கிறிஸ்டோபா், நிா்வாகிகள் சுனில் குமாா், சிபு, கனகராஜ், அஸ்பின் ரிச்சா்ட், அஜின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement