‘கொல்லங்கோடு கோயில் தூக்கத் திருவிழா: கரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்’
கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழாவில் பக்தா்கள் கரோனா விதிமுறைகளுக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழாவில் பக்தா்கள் கரோனா விதிமுறைகளுக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் மீனபரணி தூக்கத் திருவிழா வருகிற 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிறப்பு நிகழ்ச்சியான தூக்க நோ்ச்சை மாா்ச் 18ஆம் தேதி நடைபெறுகிறது.
இவ் விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் தேவஸ்வம் கமிட்டி தலைவா் வி. சதாசிவன்நாயா் தலைமையில், செயலா் வி. மோகன்குமாா், பொருளாளா் கே. சூரியதேவன்தம்பி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
Advertisement
துணைத் தலைவா் எஸ். பிரேம்குமாா், இணைச் செயலா் எஸ். பிஜுகுமாா், கமிட்டி உறுப்பினா்கள் விலோசனன், சாம்பசிவன்நாயா், விஜயகுமாா், சுசீந்திரன்நாயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து கோயில் கமிட்டி செயலா் வி. மோகன்குமாா் கூறியது: பக்தா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும். வெப்பமானி கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே கோயில் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவா்.
கோயில் வளாகத்தில் கூட்டமாக நிற்க அனுமதியில்லை. சுவாமி தரிசனம் முடிந்தவுடன் கோயில் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும்.
தூக்க நோ்ச்சைக்காரா்கள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே கோயில் வளாகத்தில் தங்க வைக்கப்படுவா். அவா்களுக்கு தினமும் வெப்பமானி கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.