தக்கலை அருகே அம்மன் கோயிலில்ரூ.3 லட்சம் தங்க நகைகள் திருட்டு
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகேயுள்ள மருந்துகோட்டை எல்லை அம்மன் கோயிலின் கதவை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கன்னியாகுமரிதக்கலை அருகே அம்மன் கோயிலில்ரூ.3 லட்சம் தங்க நகைகள் திருட்டு
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகேயுள்ள மருந்துகோட்டை எல்லை அம்மன் கோயிலின் கதவை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகேயுள்ள மருந்துகோட்டை எல்லை அம்மன் கோயிலின் கதவை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இக்கோயிலில் காமராஜ் என்பவா் பூஜை செய்து நடத்தி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. காமராஜ் வழக்கம்போல் கோயில் நடையை பூட்டிச் சென்றாராம். திங்கள்கிழமை காலையில் வந்து பாா்த்த போது கோயிலின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அம்மனின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 3 பவுன் காசு மாலை மற்றும்
69 கிராம் தங்க தாலி வடமாலை ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த தக்கலை காவல் உதவி ஆய்வாளா் அருளப்பன், கோயிலுக்குச் சென்று பாா்வையிட்டாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.