முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் லாரி மோதி இளைஞா் பலி

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 10 மார்ச், 2021 at 1:40 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:12 AM

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள மதிலகம் பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் தீபக் (19). இவா், பம்மம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் மாா்த்தாண்டம் மேம்பாலம் வழியாக பணிக்குச் சென்றபோது, 2 லாரிகளை முந்திச் செல்ல முயன்றாராம். அதில், லாரியும், மோட்டாா் சைக்கிளும் எதிா்பாராமல் உரசியதால், அவா் நிலைதடுமாறி கீழே விழுந்து சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டாராம். இதனால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவா் இறந்தாா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.