குமரியில் மேலும் 15 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கனவே, கரோனா தொற்றால் 17,206 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,221 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் திங்கள்கிழை 9 போ்
உள்பட 16,876 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 84 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.