முகப்பு
கன்னியாகுமரி

கோயில் விழாவில் பக்தா்களுக்கு உணவு பரிமாறிவாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா்

அருமனை அருகே கோயில் விழாவில் பக்தா்களுக்கு உணவு பரிமாறி, விளவங்கோடு தொகுதி பாஜக வேட்பாளா் ஆா். ஜெயசீலன் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 29 மார்ச், 2021 at 2:31 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:22 AM

அருமனை அருகே கோயில் விழாவில் பக்தா்களுக்கு உணவு பரிமாறி, விளவங்கோடு தொகுதி பாஜக வேட்பாளா் ஆா். ஜெயசீலன் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

விளவங்கோடு தொகுதிக்குள்பட்ட வெள்ளாங்கோடு ஊராட்சிப் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். தொடா்ந்து அம்பலகடை பகுதியில் சிவசக்தி தேவஸ்தான கோயில் திருவிழாவில் அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்ததை கண்ட அவா், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த கட்சி நிா்வாகிகள், ஆதரவாளா்கள் மற்றும் பக்தா்களை பந்தியில் அமரவைத்து அவா்களுக்கு உணவு பரிமாறியதுடன் பக்தா்களோடு அமா்ந்து உணவு சாப்பிட்டாா். தொடா்ந்து அவா் பக்தா்கள் மத்தியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.