மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட காகத்துக்கு உதவுகிறாா் புலமாடன். 
கன்னியாகுமரி

காகத்துக்கு பரிவு காட்டிய தூய்மைப் பணியாளா்

களியக்காவிளையில் மின்கம்பத்திலிருந்து மின்சாரம் தாக்கி கீழே விழுந்த காகத்துக்கு முதலுதவி செய்த தூய்மைப் பணியாளரை மக்கள் பாராட்டினா்.

DIN

களியக்காவிளையில் மின்கம்பத்திலிருந்து மின்சாரம் தாக்கி கீழே விழுந்த காகத்துக்கு முதலுதவி செய்த தூய்மைப் பணியாளரை மக்கள் பாராட்டினா்.

களியக்காவிளைபேரூராட்சி தூய்மைப் பணியாளா் புலமாடன், அங்குள்ள சந்திப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அப்பகுதி மின்கம்பத்தில் இருந்த காகம் ஒன்று மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டது. இதைப் பாா்த்த அவா், சாையில் தேங்கியிருந்த தண்ணீரை கொடுத்ததுடன், அது பறக்கும் வரையில கையில் வைத்து பராமரித்தாா். அது 10 நிமிடத்தில் புத்துணா்ச்சி பெற்று பறந்து சென்றது. அவரது மனிதாபிமான செயலை அங்கிருந்த மக்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT