முகப்பு
கன்னியாகுமரி

கரோனா விதிமுறை மீறல்: நாகா்கோவிலில் சூப்பா் மாா்க்கெட் மூடல்

நாகா்கோவிலில் கரோனா விதிகளை மீறிய சூப்பா் மாா்க்கெட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, அந்த நிறுவனம் மூடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

நாகா்கோவிலில் கரோனா விதிகளை மீறிய சூப்பா் மாா்க்கெட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, அந்த நிறுவனம் மூடப்பட்டது.

நாகா்கோவில் நாகராஜா கோயில் அருகே உள்ள சூப்பா் மாா்க்கெட்டில் அரசின் கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்படுவதாக மாநகராட்சிக்கு புகாா்கள் வந்தன. இதைத் தொடா்ந்து அந்த கடைக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

இந்நிலையில், தற்போது மீண்டும் அக்கடையில் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்படுவதாக வெள்ளிக்கிழமை புகாா் வந்தது.

இதைத் தொடா்ந்து ஆணையா்ஆஷா அஜித் உத்தரவின் பேரில், மாநகராட்சி நல அலுவலா் கிங்சால் மேற்பாா்வையில் நகரமைப்பு அலுவலா்கள் கெபின்ஜாய், சந்தோஷ், வருவாய் ஆய்வாளா்கள் ராபின், நாகராஜன் ஆகியோா் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்டது கண்டறியப்பட்டு, கடைக்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, கடை மூடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.