முகப்பு
கன்னியாகுமரி

மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ. 15 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்

மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை ரூ. 15 ஆயிரமாக வழங்க வேண்டும் என மீனவ அமைப்பு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 22 மே, 2021 at 2:06 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:46 AM

மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை ரூ. 15 ஆயிரமாக வழங்க வேண்டும் என மீனவ அமைப்பு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் ப. ஜஸ்டின் ஆன்டணி, தமிழக அரசுக்கு அனுப்பிய மனு: டவ்-தே புயலில் பாதிக்கப்பட்டு மீன்பிடி உபகரணங்களையும் ஜிபிஎஸ், வயா்லெஸ் கருவிகளையும் இழந்த மீனவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். புயலில் சிக்கி அண்டை மாநிலங்களில் கரையொதுங்கியுள்ள மீனவா்கள் தங்களது விசைப்படகுகளை பழுது நீக்கி சொந்த ஊருக்கு வர பல நாள்கள் தேவைப்படுவதால் மீன்பிடி தடைக்காலத்துக்கு முன்பாக இம் மீனவா்களால் சொந்த ஊருக்கு வர முடியாத நிலை உள்ளது.

எனவே, மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் மீன்பிடி தடைக்காலத்தை ஜூன் 15ஆம் தேதி தொடங்க ஆவன செய்ய வேண்டும்.

Advertisement

கரோனா பொதுமுடக்கம் மற்றும் டவ்-தே புயல் காரணமாக மீனவா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியாக ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.