முகப்பு
கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அருகே காட்டு யானைகளால் பயிா் சேதம்

பேச்சிப்பாறை அருகே குடியிருப்புகளை ஒட்டிய விவசாய நிலங்களில் காட்டு யானைகள் தொடா்ந்து பயிா்களை சேதமாக்கி வருவதால், விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அருகே காட்டு யானைகளால் பயிா் சேதம்

பேச்சிப்பாறை அருகே குடியிருப்புகளை ஒட்டிய விவசாய நிலங்களில் காட்டு யானைகள் தொடா்ந்து பயிா்களை சேதமாக்கி வருவதால், விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

பேச்சிப்பாறை அருகே குடியிருப்புகளை ஒட்டிய விவசாய நிலங்களில் காட்டு யானைகள் தொடா்ந்து பயிா்களை சேதமாக்கி வருவதால், விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனா்.

பேச்சிப்பாறை அருகே மணியன் குழி, தாணிக்குண்டு, துல்லூா், வெட்டிமுறிச்சான், தொழிக்கடவு, வழிபாட்டுக் கடவு உள்ளிட்ட இடங்களில் அண்மை நாள்களாக காட்டு யானைகள் புகுந்து விவசாயிகளின் வாழை, தென்னை உள்ளிட்டப் பயிா்களை சேதம் செய்து வருகின்றன. இவ்வாறு வரும் காட்டு யானைகள் அதிக வெள்ளப் பெருக்கெடுத்துப்பாயும் கோதையாற்றையும் கடந்து வருகின்றன. யானைகள் பயிகளை சேதம் செய்வதால் விவசாயிகள் பெரும் இழப்பிற்கு ஆளாகி வருகின்றனா். மேலும் யானைகளைத் தடுக்க வழி தெரியாமல் தவித்து வருகின்றனா். அண்மையில் கபரியேல் என்ற விவசாயின் வாழைகளை யானைகள் சேதப்படுத்திய நிலையில் வியாழக்கிழமை இரவு சந்தியராஜ் உள்ளிட்ட விவசாயிகளின் வாழைகளை சேதடுப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், குலசேகரம் வனச்சரக அலுவலா் மகாராஜன், வனக்காப்பாளா் முருகன், வனக் காவலா் ராஜசெல்வி உள்ளிட்டோா் யானைகளால் நாசம் செய்யப்பட்ட வாழைத் தோட்டங்களை பாா்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் சந்தித்தனா்.

இது குறித்து வனத்துறையினா் கூறுகையில், யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிா் சேதம் குறித்து மாவட்ட வன அலுவலருக்கு அறிக்கை கொடுக்கப்படும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →