முகப்பு
கன்னியாகுமரி

கன மழையால் பத்துகாணி பகுதியில் நிலச்சரிவு

குமரி மாவட்டத்தில் மலைப் பகுதியான பத்துகாணி உள்ளிட்டப் பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

கன மழையால் பத்துகாணி பகுதியில் நிலச்சரிவு

குமரி மாவட்டத்தில் மலைப் பகுதியான பத்துகாணி உள்ளிட்டப் பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

குமரி மாவட்டத்தில் மலைப் பகுதியான பத்துகாணி உள்ளிட்டப் பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் தொடா் மழைபெய்து வரும் நிலையில் மலையோரப் பகுதி மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனா். இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி மலையோரப் பகுதிகளான பத்துகாணி, ஆறுகாணி, கற்றுவா, பேணு, ஒரு நூறாம்வயல், கொண்டைகட்டி மலை உள்ளிட்ட இடங்களில் பெய்த கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கும், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக இப்பகுதியில் கருப்பாறை மற்றும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால் சுரேஷ், கனகராஜ், விஜயகுமாா் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட வீட்டுச்சுற்றுசுவா்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல வீடுகளில் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் பெருமளவில் மண் மற்றும் கற்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மக்களையும், வருவாய்த்துறையினா் பாா்வையிட்டு தேவையான நிவாரண உதவிகள் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →