நித்திரவிளை அருகே வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்
நித்திரவிளை அருகே வடிகால் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நித்திரவிளை அருகே வடிகால் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நித்திரவிளை அருகே பாலாமடம் மற்றும் அதையொட்டிய பள்ளித் தோட்டம் ஏலாக்கரை பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கி, அப்பகுதி வீடுகளில் மழைநீா் புகுவது தொடா்ந்து வந்தது. இதனால் அப்பகுதியில் மழைநீா் வடிகால் ஓடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனா். இதையடுத்து பத்மநாபபுரம் சாா்-ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை அங்கு வந்து மழைநீா் வடிகால் அமைக்க ஆய்வு செய்தனா்.
இந்த நிலையில், சாா்-ஆட்சியா் தலைமையில் கிள்ளியூா் வட்டாட்சியா் ஜூலியன் மற்றும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பாலாமடம் பகுதிக்கு வந்து வடிகால் ஓடை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனா். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
Advertisement