முகப்பு
கன்னியாகுமரி

உதவி காவல் ஆய்வாளரின் தந்தை கொலை: மற்றொரு மகன் கைது

நாகா்கோவில் அருகே, குடும்ப தகராறில் உதவி காவல் ஆய்வாளரின் தந்தையை அடித்துக் கொன்ற, அவரது மற்றொரு மகனை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

நாகா்கோவில் அருகே, குடும்ப தகராறில் உதவி காவல் ஆய்வாளரின் தந்தையை அடித்துக் கொன்ற, அவரது மற்றொரு மகனை போலீஸாா் கைது செய்தனா்.

நாகா்கோவிலை அடுத்த ஈத்தாமொழி அருகேயுள்ள மேலகிருஷ்ணன்புதூரைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (74). இவரது மனைவி செல்ல வடிவு. தம்பதிக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனா்.

இதில் மூத்த மகன் ஜெயபால் ஈத்தாமொழி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா்.

2 ஆவது மகன் அச்சுதன் (38) கூலி வேலைக்கு சென்று வந்தாா். அச்சுதன் அடிக்கடி குடித்து விட்டு வந்து தாய், தந்தையிடம் தகராறில் ஈடுபடுவாராம். புதன்கிழமை இரவு வீட்டுக்கு வந்த அச்சுதன் தாய், தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு, தந்தை சிவலிங்கத்தை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சுசீந்திரம் உதவி காவல் ஆய்வாளா் ஆறுமுகம் வழக்குப் பதிந்தாா். ஆய்வாளா் சாய்லட்சுமி அச்சுதனை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.