முகப்பு
கன்னியாகுமரி

கரோனா தடுப்பூசி: மாநிலத்தில் 4 ஆவது இடம் குமரி: ஆட்சியா், அலுவலா்களுக்கு அமைச்சா் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் 4 ஆவது இடம் பெற்ற்கு, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், பாராட்டியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
ngl1paaraattu_0110chn_33_6
பகிர்:

கரோனா தடுப்பூசி செலுத்தியதில் தமிழக அளவில் கன்னியாகுமரி மாவட்டம் 4 ஆவது இடம் பெற்ற்கு, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், பாராட்டியுள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியருக்கு பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி அமைச்சா் பேசியது: குமரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென்பதற்காக மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் அடிப்படையில், தற்போது நோய்த் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தொற்றை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டும் 3 ஆவதுஅலைத் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில், மாவட்டத்தின் அனைத்து சுகாதார மையங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

குமரி மாவட்ட பொதுமக்களிடையே கரோனா குறித்த விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளதன் அடிப்படையில், இதுவரை முதல் கட்டமாக 9,53,345 பேருக்கும், 2 ஆம் கட்டமாக 2,76,461 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நமது மாவட்டத்தில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தியதற்கு காரணமாக இருந்த மாவட்ட ஆட்சியா் அரவிந்த், அா்ப்பணிப்புடன் பணியாற்றிய சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பணிபுரிந்து வரும் மருத்துவா்கள், அலுவலா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள்அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும், நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, நாகா்கோவில் மாநகராட்சிஆணையா் ஆஷாஅஜித், பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.சா.தனபதி, மகளிா் திட்ட இயக்குநா் மைக்கேல்அந்தோணிபொ்னான்டோ, ஆட்சியரின் நோ்முகஉதவியாளா் (பொது) மா.வீராசாமி, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.