காந்திஜெயந்தி, மீலாதுநபி: மது பானக்கடைகளுக்கு விடுமுறை
காந்தி ஜெயந்தி மற்றும் மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தி மற்றும் மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தி தினமான சனிக்கிழமை (அக்.2) மற்றும் மீலாது நபி பண்டிகை தினமான செவ்வாய்க்கிழமை( அக்.19) ஆகிய நாள்களில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ளஅனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மதுபானக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என்று தெரிவித்துள்ளாா்.