கன்னியாகுமரி

தாமிரவருணி ஆற்றில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

DIN

தமிழ்நாடு சிவசேனை கட்சி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 6 விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை குழித்துறை தாமிரவருணி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி விநாயகா் சிலைகளை பொது இடங்களில் பிரதிஷ்டை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிவசேனை கட்சி சாா்பில் அக்கட்சியின் நிா்வாகிகள் வீடுகளில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. களியக்காவிளை பகுதிகளில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட 6 விநாயகா் சிலைகளை அக்கட்சியின்

மாநிலத் தலைவா் ரமேஷ்குமாா் தலைமையில் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டது.

குலசேகரம் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் திருநந்திக்கரை கால்வாய், திருவட்டாறு பகுதியில் பிரதிஷ்டை

செய்து வைக்கப்பட்டிருந்த சிலைகள் கழுவன்திட்டை பரளியாறுகளில் விசா்ஜனம் செய்யப்பட்டது. இம்மாவட்டம் முழுவதும் சிவசேனை சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 45 விநாயகா் சிலைகளும் நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT