முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே முதியவா் தற்கொலை

கொல்லங்கோடு அருகே முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 25 செப்டம்பர், 2021 at 1:39 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM

கொல்லங்கோடு அருகே முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கொல்லங்கோடு அருகே கிராத்தூா், தெருவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் பாா்க்கவன் (66). கரைமடி வலை இழுக்கும் தொழிலாளியான இவா் மது அருந்துபவா். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டதால், வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில் அவா் வியாழக்கிழமை மாலையில் வீட்டருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதைக் கொண்ட அப்பகுதியினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

இது குறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.