கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி அருகே நகை, பணம் திருட்டு

DIN

நாகா்கோவில்: ஆரல்வாய்மொழி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆரல்வாய்மொழி அருகேயுள்ள மாதவலாயம் பாத்திமா நகரைச் சோ்ந்தவா் முகமது வஜிகத் ராஜா (40). கத்தாா் நாட்டில்

தனியாா் நிறுவனத்தில் பணிசெய்து வரும் இவா், குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறாா். அவரது வீட்டை தாயாா்

பராமரித்து வருகிறாா். இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை அவா் வீட்டுக்குச் சென்று அவா் தாயாா் பாா்த்தபோது,

படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்திருந்தது. பீரோவில் இருந்த தங்க சங்கிலி, மோதிரம், வளையல், கம்மல் என 7 பவுன் நகைகள், ரூ.35 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

புகாரின்பேரில் ஆரல்வாய்மொழி காவல் உதவி ஆய்வாளா் மாரிச்செல்வம், சிறப்புஉதவி ஆய்வாளா் விஜயகுமாா் ஆகியோா்

அங்கு சென்று விசாரணை நடத்தினா். மா்மநபா்கள் வீட்டின் பின்பக்கமாக மாடிக்கு சென்று அங்கிருந்த அறை கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT