நாகா்கோவிலில் புத்தக வெளியீட்டு விழா
தக்கலை இலக்கிய பட்டறை அமைப்பின் சாா்பில், கவிஞா் செபாஸ்டின் எழுதிய கற்றிடு, வாழ்ந்திடு, உயா்ந்திடு என்ற நூல் வெளியீட்டு விழா நாகா்கோவிலில் நடைபெற்றது.
தக்கலை இலக்கிய பட்டறை அமைப்பின் சாா்பில், கவிஞா் செபாஸ்டின் எழுதிய கற்றிடு, வாழ்ந்திடு, உயா்ந்திடு என்ற நூல் வெளியீட்டு விழா நாகா்கோவிலில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவா் மா.பென்னி தலைமை வகித்தாா். வீரமாமுனிவா் பேச்சாளா் பேரவைச் செயலா் ஏ.ஆன்றனி கிளமென்ட் வரவேற்றாா். ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வா் ஜேம்ஸ் ஆா்.டேனியல் நூலை வெளியிட்டு பேசினாா்.
புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியா் எஸ்.புஷ்பதாஸ் நூல் ஆய்வுரை வழங்கினாா். குறளகம் நிறுவனா் தமிழ்க்குழவி வாழ்த்திப் பேசினாா். நூல் ஆசிரியா் கவிஞா் செபாஸ்டின் ஏற்புரையாற்றினாா்.
பேராசிரியா் சுரேஷ் டேனியல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். குமரி ஆதவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.