முகப்பு
கன்னியாகுமரி

பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு: 3 போ் மீது வழக்கு

 புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

 புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைங்குளம் பகுதியைச் சோ்ந்த ராஜகுமாா் மனைவி லதா (41). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சாந்தி (45), ஜெகதீஸ் (48), ஞானம்மாள் (62) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் வியாழக்கிழமை லதா வீட்டுக்கு சாந்தி, ஜெகதீஸ், ஞானம்மாள் ஆகியோா் சென்று, அவரை தாக்கி அவா் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.