முகப்பு
கிரிக்கெட்

ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதை வென்ற சாகிப்ஸதா ஃபர்ஹான், அருந்ததி ரெட்டி!

ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதினை சாகிப்ஸதா ஃபர்ஹான் மற்றும் அருந்ததி ரெட்டி வென்றுள்ளனர்.

Updated On : 23 மார்ச், 2026 at 10:53 AM
அருந்ததி ரெட்டி, சாகிப்ஸதா ஃபர்ஹான் - படம் | ஐசிசி
பகிர்:

ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதினை பாகிஸ்தான் வீரர் சாகிப்ஸதா ஃபர்ஹான் மற்றும் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி வென்றுள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது. அதன் படி, பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாகிப்ஸதா ஃபர்ஹான் மற்றும் சிறந்த வீராங்கனையாக இந்திய அணியின் அருந்ததி ரெட்டி இருவரும் தேர்வாகியுள்ளனர்.

அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாகிப்ஸதா ஃபர்ஹான் மிகவும் அபாரமாக விளையாடி ரன்கள் குவித்தார். ஒரே டி20 உலகக் கோப்பைத் தொடரில் இரண்டு சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும், டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையையும் அவர் முறியடித்தார்.

அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய மகளிரணி விளையாடியது. இந்தத் தொடரில் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி மிகவும் அபாரமாக பந்துவீசினார். முதல் டி20 போட்டியில் 4 விக்கெட்டுகளும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் தலா இரண்டு விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றினார்.

summary

India medium pacer Arundhati Reddy was on Monday named the ICC Player of the Month for February for her fine performances in a T20I series in Australia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.