FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதை வென்ற டேனி வியாட் ஹாட்ஜ்!

ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதினை இங்கிலாந்து வீராங்கனை டேனி வியாட் ஹாட்ஜ் வென்றுள்ளார்.

Updated On : 21 ஜூலை 2026, 9:40 pm IST
டேனி வியாட் ஹாட்ஜ் - படம் | ஐசிசி
பகிர்:

ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதினை இங்கிலாந்து வீராங்கனை டேனி வியாட் ஹாட்ஜ் வென்றுள்ளார்.

ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் கேத்ரின் பிரைஸ், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரீ சரணி மற்றும் இங்கிலாந்து வீராங்கனை டேனி வியாட் ஹாட்ஜ் இடம்பெற்றனர். இவர்கள் மூவரில் டேனி வியாட் ஹாட்ஜ் இந்த விருதினை வென்று அசத்தியுள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேனி வியாட் ஹாட்ஜ், இங்கிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேற உதவினார். நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் 302 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாகவும் மாறினார்.

Advertisement

Advertisement

இலங்கைக்கு எதிரானப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 62 பந்துகளில் 105* ரன்கள் எடுத்து அசத்தினார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 65 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக 89 ரன்களும் அவர் எடுத்தார்.

ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான விருதினை வென்றது குறித்து அவர் பேசியதாவது: சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு, ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. லார்ட்ஸ் திடலில் இறுதிப்போட்டியில் விளையாடியதை நினைத்து நான் என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியடைவேன் என்றார்.

summary

England's Danni Wyatt-Hodge has won the ICC Women's Player of the Month award for June.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments