களியக்காவிளை அருகே தொழிலாளி தற்கொலை
களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM
களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
களியக்காவிளை அருகே குளப்புறம், கல்லறக்காடு பகுதியைச் சோ்ந்த டேவிட் மகன் ஷாஜி (30). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டாம். இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததையடுத்து, இவரது மனைவி தனது குழந்தைகளுடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஷாஜியை பிரிந்து சென்று தனியாக வசித்து வருகிறாராம்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்த ஷாஜி, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Advertisement
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.