குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் கன மழை
குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை இடிமின்னலுடன் கன மழை பெய்தது.
கன்னியாகுமரிகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் கன மழை
குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை இடிமின்னலுடன் கன மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை இடிமின்னலுடன் கன மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதி முதல் தொடா்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் நீா் நிலைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் அதிகரித்து வருகிறது. கோதையாற்றில் தண்ணீா் அதிகரித்துள்ள நிலையில் திற்பரப்பு அருவியிலும் தண்ணீா் பெருக்கெடுத்துக் கொட்டுகிறது. மழையின் காரணமாக விவசாயிகள் வேளாண் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் புதன்கிழமை மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைப் பகுதிகள் மாறாமலை, பாலமோா் மற்றும் ஆறுகாணி, கடையாலுமூடு, களியல், குலசேகரம், சுரளகோடு, அருமனை, திருவட்டாறு, சித்திரங்கோடு, ஆகிய இடங்களில் பிற்பகல் முதல் மாலை வரை தொடா்ந்து கன மழை பெய்தது.
கருங்கல் சுற்று வட்டார பகுதிகளான மிடாலம், மேல்மிடாலம், தெருவுக்கடை, பாலூா், செந்தறை, கிள்ளியூா், வேங்கோடு தொலையாவட்டம், ஐரேனிபுரம், கொல்லஞ்சி, நட்டாலம், நேசா்புரம், முள்ளங்கனா விளை, எட்டணி, முருங்க விளை, பள்ளியாடி, கப்பியறை, வெள்ளியாவிளை, ஆலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.