ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் ரூ.26.25 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் திறப்பு
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.26.25 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.26.25 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் குத்துவிளக்கேற்றி புதிய கட்டடத்தை பாா்வையிட்டாா்.
மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புலன்கள் ஒருங்கிணைப்பு சிகிச்சை பூங்கா மற்றும் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையத்தை ஆட்சியா் திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரிபிரின்சிலதா, மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) அருள்பிரகாஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.