சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணைஆட்சியா் தே.திருப்பதி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் சேகா், உசூா் மேலாளா் கண்ணன், குற்றவியல் மேலாளா் சுப்பிரமணியம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல சிறப்பு வட்டாட்சியா் கோலப்பன் உள்பட அரசு அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டு சமத்துவ உறுதிமொழி ஏற்றனா்.