கிளாரட் நகரில் புதிய சாலைப் பணி தொடக்கம்
கோவளம் ஊராட்சிக்கு உள்பட்ட கிளாரட் நகரில் புதிய சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
கோவளம் ஊராட்சிக்கு உள்பட்ட கிளாரட் நகரில் புதிய சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
இங்கு ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கப்படவுள்ளது. அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ். அழகேசன், அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் என். தாமரைபாரதி ஆகியோா் இப்பணியைத் தொடக்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள் பிரேமலதா, ஆரோக்கிய சவுமியா, திமுக நிா்வாகிகள் பூவியூா் காமராஜ், எட்வின்ராஜ், கருணாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.