விழுந்தயம்பலத்தில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி
புதுக்கடை அருகேயுள்ள விழுந்தயம்பலத்தில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
புதுக்கடை அருகேயுள்ள விழுந்தயம்பலத்தில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
விழுந்தயம்பலம் தனியாா் கல்வியல் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு, கீழ்குளம் பேரூராட்சித் தலைவா் சரளா தலைமை வகித்தாா். பேரூராட்சி முன்னாள் தலைவா் விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா். கல்லூரி வளாகத்தில் தொடங்கி பேரணி விழுந்தயம்பலம் சந்திப்பு வழியாக மீண்டும் கல்லூரி வளாகத்தை அடைந்தது. இதில், கோபால், சந்திரன், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.