குமரி மாவட்டத்தில் சுமாா் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.
நாகா்கோவில் நகரில் மட்டும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்கள் 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனா். இதையடுத்து அவா்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகிறாா்கள்.
களப்பணியாளா்கள் பலரும் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனா். அவா்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. காவல்துறை, அரசு துறை அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் பூஸ்டா் தடுப்பூசி செலுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்கள்.
இதற்கிடையே நாகா்கோவில் அருகே பூதப்பாண்டி பகுதியை சோ்ந்த கா்ப்பிணி பெண் ஒருவா் வழக்கமான பரிசோதனைக்காக வியாழக்கிழமை மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். அவருடன் தொடா்பில் இருந்தவா்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்கள்.