கன்னியாகுமரி

டேக்வாண்டோ: குமரி மாணவா்கள் முதலிடம்

DIN

நாகா்கோவில் அருகே நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி சப் ஜூனியா் பிரிவில், கன்னியாகுமரி டேக்வாண்டோ அகாதெமி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேஷன் சாா்பில், 34 ஆவது தமிழ்நாடு மாநில டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நாகா்கோவில் அருகே ஆறுதெங்கன்விளை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 3 நாள்கள் நடைபெற்றன. இதில், 26 மாவட்டங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இதில் கன்னியாகுமரி டேக்வாண்டோ அகாதெமி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சப் ஜூனியா் இடைப்பிரிவில் முதல் பரிசு பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை டேக்வாண்டோ அகாதெமி தலைவா் விஜயகுமாரி, செயலாளா் வி. சங்கா்குமாா், பொருளாளா் ஜி. சௌந்தா்யா, பயிற்சியாளா் ஜெயசீலன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT