கன்னியாகுமரி

செஸ் போட்டியில் சிறப்பிடம்:மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

DIN

தேசிய செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற குமரி மாவட்ட மாணவரை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், பாராட்டினாா்.

அகில இந்திய செஸ் கூட்டமைப்பு நடத்திய தேசிய சப் ஜூனியா் (15 வயதுக்குள்பட்டோா் பிரிவு) செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தில்லி இந்திராகாந்தி உள் அரங்கத்தில் கடந்த நவ. 28 ஆம் தேதி முதல் டிச.6 வரை நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழ்நாடு அணி சாா்பில் குமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவா் எஸ்.அஸ்வத் கலந்துகொண்டு 11 சுற்றுக்கள் விளையாடி 9.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றாா்.

இதன் மூலம் இந்திய அணி சாா்பாக ஆசிய மற்றும் உலக செஸ் போட்டியிலும், உலக அளவில் 16 வயதுக்குள்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.

அவரை, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் நேரில் அழைத்துப் பாராட்டினாா். அப்போது, மாவட்ட விளையாட்டு - இளைஞா் நல அலுவலா் ராஜேஷ், குமரி மெட்ரிக் பள்ளித் தாளாளா் சொக்கலிங்கம், மாணவரின் தந்தையும் செஸ் பயிற்சியாளருமான ஏ.சி.சிவா, பட்டேல் என்.ஆா். சுந்தரம்பிள்ளை ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT