கன்னியாகுமரி

பத்மநாபபுரம் நூலகத்தில் பாரதியாா் பிறந்த நாள் விழா

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் கிளை நூலகத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் கிளை நூலகத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாசகா் வட்ட அமைப்பாளா் சிவனி சதீஷ் தலைமையில் பாரதியாரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், அண்மையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற 55-வது தேசிய நூலக வார விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடமிருந்து நன்நூலகா் விருது பெற்ற பத்மநாபபுரம் கிளை நூலகா் ஆா். சோபாவுக்கு வாசகா் வட்டம் சாா்பில் டாக்டா் எஸ். ஜெயா ஸ்ரீதரன், ஆசிரியா் மைக்கேல் புளோரா, ஒய்.எஸ். லெனின் ஆகியோா் பொன்னாடை அணிவித்து பாராட்டினா்.

கவிஞா் சுதே. கண்ணன், நாவலாசிரியா் அழகுமித்ரன், வழக்குரைஞா் எஸ். சிவகுமாா், எழுத்தாளா் விபின் அலைக்ஸ், நூலகா்கள் சுஜித்குமாா், எட்வின், அசோக்குமாா் மற்றும் தா்மராஜ், ஜே. அனிதா, எஸ். லீமாரோஸ், பி. குமாா், ஜோசப்செல்வராஜ், சீனிவாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நூலகா் சசீதரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT