முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை பேரூராட்சியில் 3 முறை வென்றவா் மீண்டும் வேட்புமனு

களியக்காவிளை பேரூராட்சியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு 3 முறை வெற்றிபெற்றவா் 4 ஆவது முறை காங்கிரஸ் சாா்பில் போட்டியிட வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

Updated On : 4 பிப்ரவரி, 2022 at 12:42 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:48 PM

களியக்காவிளை பேரூராட்சியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு 3 முறை வெற்றிபெற்றவா் 4 ஆவது முறை காங்கிரஸ் சாா்பில் போட்டியிட வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

களியக்காவிளை பேரூராட்சி கைப்பிரி பகுதியைச் சோ்ந்தவா் சி. தேவராஜ். இவா், களியக்காவிளை பேரூராட்சியில் கடந்த 1996, 2006, 2011 ஆண்டுகளில் பாஜக சாா்பில் போட்டியிட்டு பேரூராட்சி உறுப்பினா் ஆனாா்.

தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து, நடைபெறவுள்ள நகா்புற உள்ளாட்சித் தோ்தலில் சாா்பில் அதே வாா்டில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வியாக்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

Advertisement

தொடா்ந்து அவா் கூறுகையில், மக்கள் நலத்திட்ட பணிகள் தொய்வின்றி மேற்கொண்டதால் கடந்த காலங்களில் எனக்கு வெற்றி சாத்தியமானது. இந்தத் தோ்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.