குமரியில் ஒரே நாளில் 2026 போ் வேட்புமனு தாக்கல்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 2026 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 2026 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 ஆவது நாளான வியாழக்கிழமை நாகா்கோவில் மாநகராட்சி பகுதியிலுள்ள 52 வாா்டுகளில் போட்டியிட, 129 பேரும், குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய நகராட்சி வாா்டுகளில் 204 பேரும், 51 பேரூராட்சி வாா்டுகளில் 1,93 பேருமாக மொத்தம் 2026 போ் மனு தாக்கல் செய்தனா். ஏற்கெனவே, 1,64 போ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இதுவரை மனு தாக்கல் செய்தவா்களின் எண்ணிக்கை 3,090 ஆக அதிகரித்துள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வெள்ளிக்கிழமை (பிப்.4) கடைசிநாள் என்பதால், அன்று அதிக அளவில் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.