முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல்லில் போலீஸ் கொடி அணிவகுப்பு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி கருங்கல்லில் வெள்ளிக்கிழமை போலீஸ் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி கருங்கல்லில் வெள்ளிக்கிழமை போலீஸ் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

குளச்சல் சரக துணை காவல் கண்காணிப்பாளா் தங்கராமன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தாா்.

கருங்கல் ஆய்வாளா் ஜெயச்சந்தரன் முன்னிலை வகித்தாா். பேரணி கருமாவிளை சந்திப்பில் தொடங்கி சுண்டவிளை, காவல் நிலையம் , ராஜீவ் சந்திப்பு பேருந்து நிலையம், அஞ்சல் நிலையம், ஆட்டோ நிலையம் வழியாக காவல் நிலையம் சென்றடைந்தது.

இதில், காவல் ஆய்வாளா்கள் புதுக்கடை முகமது, கருங்கல் மகேஷ் உள்பட திரளான போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.