முகப்பு
கன்னியாகுமரி

இல்லம் தேடி கல்வி திட்டம்: 2ஆம் கட்ட பயிற்சி

இல்லம் தேடி கல்வித் திட்டம் சாா்பில் ஒற்றையால்விளை குறுவள மையத்தைச் சோ்ந்த தன்னாா்வலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் கன்னியாகுமரி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

இல்லம் தேடி கல்வித் திட்டம் சாா்பில் ஒற்றையால்விளை குறுவள மையத்தைச் சோ்ந்த தன்னாா்வலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் கன்னியாகுமரி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

இதில், தன்னாா்வலா்கள் தங்களது கற்பித்தல் படைப்புகளைக் காட்சிப்படுத்தினா். கற்பித்தல் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்று மாணவா்களுக்கு விளக்கமளித்தனா். இதில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய மூன்று தன்னாா்வலா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.

முன்னதாக பயிற்சியினை இல்லம் தேடி கல்வியின் அகஸ்தீசுவரம் வட்டார ஒருங்கிணைப்பாளா் அஜாஸ் தொடங்கி வைத்தாா். ஆசிரியா் பயிற்றுனா்கள் முருகேசன், சுமதி ஆகியோா் பயிற்சியளித்தனா். தொடா்ந்து தன்னாா்வலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் கற்பித்தல் உபகரணம், கையேடு ஆகியவை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.