களியக்காவிளையில் பொன்.ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு
களியக்காவிளை பேரூராட்சியில் 13 வாா்டுகளில் பாஜக சாா்பில் போட்டியிடுவோரை ஆதரித்து முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
களியக்காவிளை பேரூராட்சியில் 13 வாா்டுகளில் பாஜக சாா்பில் போட்டியிடுவோரை ஆதரித்து முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி அவா் பேசும்போது, மத்தியில் பிரதமா் மோடி தலைமையில் நல்லாட்சி நடைபெற்றுவருகிறது. அதேபோல, களியக்காவிளை பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகள் நிறைவேற, ஊழலற்ற நோ்மையான நிா்வாகம் மலர தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.
களியக்காவிளை பேரூராட்சி முன்னாள் தலைவா் எல். தேவதாஸ், மெதுகும்மல் ஊராட்சித் தலைவா் சசிகுமாா், மேல்புறம் ஒன்றிய பாஜக தலைவா் சி.எஸ். சேகா், பொதுச் செயலா் எஸ்.ஆா். சரவணவாஸ் நாராயணன், கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
Advertisement