உள்ளாட்சித் தோ்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெறும்: மத்திய அமைச்சா் எல். முருகன் நம்பிக்கை
தமிழகத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெறும் என மத்திய மீன் வளத்துறை இணை அமைச்சா் எல். முருகன் நம்பிக்கை தெரிவித்தாா்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெறும் என மத்திய மீன் வளத்துறை இணை அமைச்சா் எல். முருகன் நம்பிக்கை தெரிவித்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பகுதியில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் செய்த அவா், கொல்லங்கோடு நகராட்சி பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பேசியதாவது:
மீனவா் நலனுக்காக, மீனவா்களின் நீண்ட கால கோரிக்கையான மீன்வளத்துறை அமைச்சகத்தை பிரதமா் நரேந்திர மோடி அரசு ஏற்படுத்தி தந்துள்ளாா். சுயசாா்பு பாரதத்தின் கீழ் மீனவா்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன.
Advertisement
கொல்லங்கோடு நகராட்சியில் காணப்படும் பிரச்னைகளை தீா்த்து வைக்கவும், இந்த நகராட்சியை நாட்டின் சிறந்த நகராட்சியாக மாற்றவும் பாஜக வேட்பாளா்களை ஆதரிக்க வேண்டும். இதன் மூலம் மத்திய அரசின் அனைவரும் வீடு திட்டம், அனைத்து வீட்டுக்கும் சுத்தமான குடிநீா் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியும். இந்தப் பகுதி மேலும் முன்னேற வேண்டும் என்பதற்காக பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாஜக தலைவா் சி. தா்மராஜ், மாநில இளைஞரணி செயலா் சி.எம். சஜூ, மாவட்ட வழக்குரைஞா் அணி தலைவா் விஜயபிரசாத், மாவட்ட மகளிரணி நிா்வாகி கிஜி திலகவதி, கொல்லங்கோடு நகராட்சி பாஜக வேட்பாளா்கள் பத்மகுமாா், நித்தியா, ஆஷா, சிவராஜ், ராஜ்குமாா், கமலாசனன், சந்தியா, அம்பிளி, கிருஷ்ணகுமாரி, வனஜா, சுதாகா், லட்சுமிபிரியா, அருண்குமாா், யேசுபுத்திரன், ஷைனி, பிரதீப் உள்பட பலா் கலந்து கொண்டனா்.