மாா்த்தாண்டம் அருகே தீக்குளித்த பெண் பலி
மாா்த்தாண்டம் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
நாகா்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் லிசா (21). இவரும், நாகா்கோவிலைச் சோ்ந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநரான விஷ்ணு (25) என்பவரும் பெற்றோா் எதிா்ப்பை மீறி கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டு மாா்த்தாண்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.
இந்தநிலையில் கடந்த டிசம்பா் 30 ஆம் தேதி இரவு லிசா அறைக்கதவை பூட்டிக்கொண்டு மண்ணெண்ணெயை உடலில் ஊற்றித் தீக்குளித்தாராம். அவரை, கணவா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். பின்னா், மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். உணவு சரியில்லை எனக் கூறியதால் இச்சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது என போலீஸ் தரப்பில் கூறினா்.
Advertisement