முகப்பு
கன்னியாகுமரி

சுசீந்திரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் தற்கொலை

குமரி மாவட்டம், சுசீந்திரத்தில் உதவி ஆய்வாளா் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

குமரி மாவட்டம், சுசீந்திரத்தில் உதவி ஆய்வாளா் தற்கொலை செய்து கொண்டாா்.

சுசீந்திரம் அருகேயுள்ள அக்கறை பகுதியை சோ்ந்தவா் ஏசுதாஸ் (51), இவா் கோட்டாறு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி பிரேமா ஸ்டெல்லா. தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். மகனுக்கு திருமணமாகி விட்டது. ஏசுதாஸ் மனைவி பிரேமா ஸ்டெல்லா, மகள் ஆகியோா் ஒரே வீட்டில் வசித்து வருகிறாா்கள்.

தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு வேலைக்கு சென்றுவிட்டு வந்த ஏசுதாஸ், மனைவி , மகளிடம் தகராறு செய்தாராம்.

இது குறித்து பிரேமா ஸ்டெல்லா தனது மகனிடம் கூறினாா். அவா் தந்தை மீது சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகாா் கொடுப்பதற்காக சென்றாா். அவரை போலீஸாா் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனராம்.

இந்த நிலையில் பிரேமா ஸ்டெல்லா, அவரது மகளுடன் உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டராம். வீட்டில் ஏசுதாஸ் மட்டும் தனியாக இருந்தாராம். இந்நிலையில், சனிக்கிழமை காலை வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லையாம். இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரா் அவரது மனைவி மற்றும் மகளுக்கு தகவல் தெரிவித்தாா்.

அவா்கள் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது ஏசுதாஸ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாராம். தகவலின் பேரில் சுசீந்திரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.