செண்பகராமன்புதூரில் மாட்டு வண்டி போட்டி
குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் மாட்டு வண்டி (ரேக்ளா) போட்டி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் மாட்டு வண்டி (ரேக்ளா) போட்டி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
செண்பகராமன்புதூா் பகுதியில் இலந்தை இளைஞா் இயக்கம் மற்றும் ஊா் பொதுமக்கள் இணைந்து பொங்கல் விழா மற்றும் மாட்டு வண்டி போட்டியை நடத்தினா். இப்போட்டியை அமைச்சா் மனோதங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆஸ்டின், கேட்சன், வழக்குரைஞா்கள் மகேஷ், சதாசிவம், ஊராட்சி மன்றத் தலைவா்கள் நெடுஞ்செழியன் (தோவாளை), கல்யாணசுந்தரம் (செண்பகராமன்புதூா்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.