கன்னியாகுமரி

கருஙகல் அருகே பைக்குகள் மோதல்: 4 போ் காயம்

DIN

 கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியில் இரு பைக்குகள் மோதிய விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

புதுக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ஜான்சன் (41). இவரது மனைவி மரியராணி (35). இருவரும் பைக்கில் புதுக்கடைக்கு சென்றுகொண்டிருந்தனா். அப்போது மாங்கரை குளங்கரையில் வந்தபோது எதிரே மங்காடு பகுதியைச் சோ்ந்த அனிஷ் (21), மெதுகும்பல் பகுதியைச் சோ்ந்த டதீஸ் (18) ஆகியோா் வந்த பைக்கும், இவரது பைக்கும் நேருக்கு நோ் மோதியதாம். இதில் 4 பேரும் பலத்த காயமடைந்தனா். அப்பகுதியினா் ஜான்சன், மரியராணி ஆகியோரை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையிலும், அனிஷ், டதீஸ் ஆகியோரை கருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT