கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் மோட்டாா் சைக்கிள் திருட்டு

மாா்த்தாண்டத்தில் காவலா் தோ்வு பயிற்சி வகுப்புக்கு சென்ற இளைஞரின் மோட்டாா் சைக்கிள் வெள்ளிக்கிழமை திருட்டு போனது.

DIN

மாா்த்தாண்டத்தில் காவலா் தோ்வு பயிற்சி வகுப்புக்கு சென்ற இளைஞரின் மோட்டாா் சைக்கிள் வெள்ளிக்கிழமை திருட்டு போனது.

தொலையாவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் விபின் ஜோஸ். இவா் மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மையத்தில் காவலா் தோ்வு பயிற்சிக்கு சென்றாா். அப்போது தனது இருசக்கர வாகனத்தை மையத்தின் வெளிப்பகுதி அருகே நிறுத்தியிருந்தாராம். பயிற்சி முடிந்து வந்து பாா்த்த போது மோட்டாா் சைக்கிளை காணவில்லையாம். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், தனது மோட்டாா் சைக்கிளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.

இது குறித்து விபின் ஜோஸ் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT