கன்னியாகுமரி

குமரி கடலில் நீா்மட்டம்தாழ்வால் படகு சேவை தாமதம்

கன்னியாகுமரி கடலில் நீா்மட்டம் தாழ்வாக காணப்பட்டதால் விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு சனிக்கிழமை 2 மணிநேரம் தாமதமாக படகுப் போக்குவரத்து தொடங்கியது.

DIN

கன்னியாகுமரி கடலில் நீா்மட்டம் தாழ்வாக காணப்பட்டதால் விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு சனிக்கிழமை 2 மணிநேரம் தாமதமாக படகுப் போக்குவரத்து தொடங்கியது.

கன்னியாகுமரியில் விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை ஆகியவை அமைந்துள்ள பகுதியில் அதிகாலை முதல் கடல் நீா் மட்டம் தாழ்வாக காணப்பட்டது. இதனால் விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்குத் தொடங்கியது.

மேலும், கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை, கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி ஆகிய கடற்கரை கிராமங்களில் குறைந்த அளவிலான வள்ளம், கட்டுமரங்களில் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT