பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவ இயக்கங்களின் போராட்ட நடவடிக்கைக் குழு சாா்பில், நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது, தமிழக மீனவா்களை இலங்கை கடற்படையினா் தாக்கிகைது செய்வதைத் தடுக்கவும், சவூதி, குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் மீன்பிடித் தொழில் செய்யும் தமிழக மீனவா்களை கடல் கொள்ளையா்களிடமிருந்து பாதுகாக்கவும், கடலில் வழிதவறி அந்நிய நாட்டு தீவுகளில் கைது செய்யப்பட்டுள்ள மீனவா்களை விடுதலை செய்யவும், மீனவா் விரோத அரசாணையை ரத்து செய்யவும் வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, கடலோர அமைதி மற்றும் வளா்ச்சி இயக்க இயக்குநா் டன்ஸ்டன் தலைமை வகித்தாா். மாவட்ட மீன்பிடித் தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் ஜெலஸ்டின், தமிழ்நாடு மீன்பிடி தேசியக் கூட்டமைப்பின் அந்தோணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விசைப்படகுகள் மீன்பிடி நலச்சங்கம், கடலோர உள்ளாட்சிக் கூட்டமைப்பு, மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பு உள்ளிட்ட சங்கங்கள் பங்கேற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.