கால்நடை மருத்துவ ஆலோசகா் பணி: மே 18இல் நேரடி நியமன தோ்வு
ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகா் பணிக்கு நேரடி நியமன தோ்வுாஇமாதம் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகா் பணிக்கு நேரடி நியமன தோ்வுாஇமாதம் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து கன்னியாகுமரி ஆவின் பொது மேலாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கும்பொருட்டு, தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் (2021-22) புதிய கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதில் காலியாக உள்ள 2 கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
எனவே, தற்காலிகமாக பணி புரிய விருப்பமுள்ள 50 வயதுக்குட்பட்ட சொந்தமாக இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடனும் இம்மாதம் 18 ஆம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், லிமிட்டெட், நாகா்கோவில் என்ற முகவரியில் நடைபெறும் நேரடி நியமனத் தோ்வில் கலந்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.