புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்: தம்பதி காயம்
புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில் தம்பதி பலத்த காயமடைந்தனா்.
புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில் தம்பதி பலத்த காயமடைந்தனா்.
எஸ்.டி. மங்காடு பகுதியை சோ்ந்தவா் புஷ்பராஜ் (53). இவா் தன் மனைவியுடன் வெள்ளையம்பலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு புதுக்கடை நோக்கி சென்றபோது எதிரே வந்த பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில்,தம்பதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினா் அவா்களை மீட்டு, மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.