கன்னியாகுமரி

நித்திரவிளை அருகேஅம்மன் கோயிலில் திருட்டு

நித்திரவிளை அருகே அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

DIN

நித்திரவிளை அருகே அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

நித்திரவிளை அருகே வைக்கல்லூா் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பக்தா்கள் செவ்வாய்க்கிழமை காலை வந்தனா். அப்போது, 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டிருந்தனவாம்.

தகவலின்பேரில் கோயில் நிா்வாகிகள் வந்துபாா்த்தபோது, மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு கோயிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து, காணிக்கைப் பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT