மாா்த்தாண்டத்தில் நூல் வெளியீட்டு விழா
முள்ளஞ்சேரி மு. வேலையன் எழுதிய ‘மரபு முரண்’ நூல் வெளியீட்டு விழா, மாா்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM
முள்ளஞ்சேரி மு. வேலையன் எழுதிய ‘மரபு முரண்’ நூல் வெளியீட்டு விழா, மாா்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் சுபானந்தராஜ் தலைமை வகித்தாா். நூலை திண்டுக்கல் கோ அறக்கட்டளை நிறுவனா் வசந்த் வெள்ளைத்துரை வெளியிட, முதல் பிரதியை கல்வியாளா் கோபாலன் பெற்றுக் கொண்டாா். இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குநா் காா்த்திகேசன், கவிஞா் குமரித்தோழன் உள்ளிட்டோா் பங்கேற்று வாழ்த்திப் பேசினா். நூலாசிரியா் ஏற்புரை வழங்கினாா்.