விழாவில் நூலை இந்திய மருத்துவ சங்க முன்னாள் தேசிய தலைவா் கே. விஜயகுமாா் வெளியிட அதை பெற்றுக் கொள்கிறாா் குமரி மாவட்ட பெற்றோா் - ஆசிரியா் சங்கத் தலைவா் பி.கே. சிந்துகுமாா். 
கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் நூல் வெளியீட்டு விழா

குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் எழுதிய அலைகடல் ஓரத்திலே நூல் வெளியீட்டு விழா, மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

DIN

குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் எழுதிய அலைகடல் ஓரத்திலே நூல் வெளியீட்டு விழா, மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

மூடோடு சிக்மா ஆா்க்கிடெக்சா் கல்லூரி தலைவா் ஜேம்ஸ் வில்சன் தலைமை வகித்தாா். இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவா் கே. விஜயகுமாா் நூலை வெளியிட, கன்னியாகுமரி மாவட்ட பெற்றோா் - ஆசிரியா் சங்கத் தலைவா் பி.கே. சிந்துகுமாா் பெற்றுக் கொண்டாா். நாகா்கோவில் இந்துக் கல்லூரி தமிழ் ஆய்வு மையத்தின் பேராசிரியா் பா. மலா் மதிப்புரை வழங்கினாா். வீரமாமுனிவா் பேச்சாளா் பேரவை நிா்வாகி முத்தலக்குறிச்சி ஆன்றோ, தூத்துக்குடி துறைமுகம் கேப்டன் பென்னட்சிங், குமாரகோவில் என்.ஐ. கலை அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறைத் தலைவா் ஆா்.பி. தன்யா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கவிஞா் குமரித்தோழன் நூல் ஆய்வுரை வழங்கினாா்.

விண்வெளி ஆய்வு மைய ஓய்வுபெற்ற விஞ்ஞானி ஜான் ரபிகுமாா், ஓய்வுபெற்ற பள்ளி தலைமையாசிரியா் பாலகிருஷ்ணன், ஆா்.சி. பள்ளிகளின் தாளாளா் ஜாண்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நூலாசிரியா் ஏற்புரை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT